×
 

கொஞ்சம் பயமா தான்யா இருக்கு! வெறிபிடித்த வளர்ப்பு நாய்... 14 பேரை கடித்துக் குதறிய சம்பவம்...!

நெல்லையில் வெறிபிடித்த வளர்ப்பு நாய் 14 பேரை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான சமூகப் பிரச்சனையாக உள்ளது. இந்தியா போன்ற பல நாடுகளில், குறிப்பாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இவை மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், அவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் சமூகத்தில் கவலைக்குரிய விஷயமாக உள்ளன. 

தெரு நாய்களால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, அவை மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல். தெரு நாய்கள், குறிப்பாக பயந்த அல்லது ஆக்ரோஷமான நிலையில், மனிதர்களைக் கடிக்கலாம். இது வெறிநாய்க் கடி (ரேபிஸ்) போன்ற ஆபத்தான நோய்களைப் பரப்புவதற்கு வழிவகுக்கிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்படுகின்றனர், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.

இது மருத்துவச் செலவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, குழந்தைகள் தெரு நாய்களைப் பார்த்து பயப்படுவது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கலாம்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு தெருநாய்கள் பிரச்சனையை அதிகரித்தது. தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தெருநாய்கள் மட்டுமல்லாத வளர்ப்பு நாய்கள் கூட சில சமயங்களில் வெறிபிடித்து கடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. வீட்டில் வளர்க்கும் நாய்களின் உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பையில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாய் ஒன்று இருக்கிறது.

இதையும் படிங்க: நெல்லையில் புதிய விண்வெளி மையம்! கட்டுப்பாடு மையம் அமைக்க டெண்டர் கோரிய இஸ்ரோ...

அந்த நாய் வெறிபிடித்து 14 பேரை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாயின் உரிமையாளர் உட்பட 14 பேர் இதில் காயமடைந்துள்ள நிலையில் அம்பை நகராட்சி சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த அம்பை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர்.. மார்தட்டி சொன்ன அமித்ஷா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share