தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் காவல்துறையினருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வடுகபட்டி அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் சந்தேகிக்கும் படியாக இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பொழுது அவர்கள் 5 காக்கி நிற கவர்களில் மொத்தம் 7.570 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கம்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு கஞ்சா வாங்கியதாகவும், வாங்கிய கஞ்சாவை ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து அதன் பின் சென்னையில் இருந்து தேனிக்கு சென்ற அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்களும் கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்யும் நோக்கில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்..! ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!