×
 

#BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நில வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் நேற்று முதலே விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கனமழை காரணமாக காரைக்காலில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று புதுச்சேரியிலும் மழை வெருத்து வாங்கி வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புரட்டி எடுக்கும் கனமழை... காரைக்காலை அடுத்து இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share