“கேரட் 4 மடங்கு, பீன்ஸ் 2 மடங்கு உயர்வு”... காய்கறி விலையால் கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்...!
தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலி குமரி மாவட்டத்தில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்வு.
தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக குமரி மாவட்ட காற்கறி சந்தைகளில் காற்கறிகள் வரத்து குறைந்து. மேலும் சுபமுகூர்த்த தினங்கள் தொடர்ந்து வருவதாலும் பொதுமக்களுக்கு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து குமரி மாவட்டம் நாகர்கோயில் வடசேரி, அப்டா மார்க்கெட் போன்ற காய்கறி சாந்தைகளில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு பத்து ரூபாய்க்கு விற்ற வெள்ளரிகாய் தற்பொழுது ஆறு மடங்கு விலை உயர்ந்து அறுபது ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் நான்கு மடங்கு விலை உயர்ந்து 80 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இரண்டு மடங்கு விலை உயர்ந்து 140 ரூபாய்க்கும், முருங்கைகாய் 10 ரூபாயில் இருந்து எட்டு மடங்கு விலை உயர்ந்து 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 ரூபாயில் இருந்து ஆறு மடங்கு விலை உயர்ந்து 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!
அதைப்போல் உருளை கிழங்கு 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கும் என அனைத்து வகையான காய்கறிகள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதால் காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்கும் என காற்கறிகள் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வால் சிறு வியாபாரிகள், இல்லதரசிகள் , பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!