எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சிப்பது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி என எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம் எல் ஏவுமான ஜெகன் மூர்த்தியுடன் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். அப்போது 300க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். அரசியல் காழ்ப்புணர்சியால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது கண்டன் பதிவில் கூறியுள்ளதாவது; புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தி அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
இதையும் படிங்க: ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!
அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும்? பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தி அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் உணரவேண்டும். இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவில்ல கூட அட்டூழியம்! சன்னதியை வேலிப்போட்டு மூடுவதா? அறநிலைய துறையை அக்குவேறாக பிரித்த இபிஎஸ்..!