×
 

ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!

ஆள்கடத்தல் வழக்கு விசாரணை நடைபெற்ற போது தனது வீட்டில் இருந்து எம் எல் ஏ ஜெகன்மூர்த்தி தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஜெகன்மூர்த்தி MLA வீட்டில் போலீஸ் குவிப்பு...பதற்றம்.. பரபரப்பு!

சென்னை ஆண்டரசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிர்களை பறித்த ஒவ்வாமை.. 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடம்! அதிர்ச்சி தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share