×
 

3 மாசத்துக்கு முன்னாடி இறந்து போனவருக்கு பதவி... இபிஎஸ் அறிவிப்பால் ஷாக்கான அதிமுகவினர்...!

ஆரணி அதிமுகவில் இறந்த நிர்வாகிக்கு 3மாதம் கழித்து கட்சி பதவி வழங்கி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக கட்சி சார்பில் திருவண்ணாமலை வடக்கு தெற்கு மத்தியம் என 3பிரிவுகளாக பிரித்து ஆரணி போளுர் தொகுதி உட்பட்டவைக்கு மத்திய மாவட்ட செயலாளராக போளுர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதாவை அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் மத்திய மாவட்டம் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு பதிவ வழங்கப்பட்டன.

மேலும் மீதியுள்ள கட்சி பதவிகளுக்கு நேற்று முன்தினம் மத்திய மாவட்டம் பரிந்துரையின் பேரில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணன்(62) இவர் அதிமுக தீவிர விசுவாசியாக இருந்து கட்சி பணியில் தன்னை ஈர்த்து கொண்டு பணிபுரிந்து வந்தார். திடீரென கடந்த மார்ச் 16ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். பின்னர் அதிமுக ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் தற்போது திடிர் திருப்பமாக நேற்று முன்தினம் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பதவி வழங்கபட்ட செய்தி அதிமுக அதிகாரபூர்வ நாளிதழ் நமது அம்மாவில் வெளியானது. இதில் கடந்த 3மாதம் முன்பு இறந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது இதனை கண்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதையும் படிங்க: இப்படியா செய்வது? கோர்ட்டில் குவிந்த திமுகவினர்... பதற்றம்... பரபரப்பு!

3மாதம் முன்பு இறந்த நிர்வாகிற்கு தற்போது பதவி வழங்கிய மத்திய மாவட்டம் எப்படி வருகின்ற 2026ம் தேர்தலில் நின்று வெற்றி பெறும் என கட்சியினர் மத்தியில் குற்றசாட்டு எழுந்து வருகின்றன.

 

இதையும் படிங்க: தீயசக்தி திமுகவை ஓட, ஓட விரட்டாமல் இதை செய்ய மாட்டேன்... ராஜேந்திர பாலாஜி சபதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share