×
 

காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதி... திமுகவிற்கு இது கை வந்த கலை... எடப்பாடி பழனிசாமி தாக்கு!!

20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை காற்றிலே பறக்கவிடுவது திமுகவிற்கு கை வந்த கலை என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுக்குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுக-விற்கு கை வந்த கலை.

இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொடை நடுங்கி அதிமுக! பேசாம அடிமை கழகம்னு பெயர் மாத்திக்கோங்க... திமுக கடும் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share