உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...
உங்கள் தாயை, மனைவியை விமர்சித்தாலும் இப்படித்தான் சோற்றால் அடித்த பிண்டமாக அமர்ந்திருப்பீர்களா என்று ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தொடர்பாக வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகவும், அதனை எதிர்க்காமல் அதிமுகவினர் அமைதியாக இருந்ததாகவும் திமுக தரப்பின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா.,பாஜக பாசமா.,உங்கள் தாயை, மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா., அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா.,முருகன் மாநாடு, RSS நூற்றாண்டு, அடுத்து நாக்பூரில் பழனிசாமி தஞ்சம் அடைவாரா., என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது என்றும் மத்திய அரசின் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா என சாடியுள்ளார். 'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி
அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா.,அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா எனவும் ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது., திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.,மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நடக்கும் மாநாட்டிற்குத் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்த்திருக்கிறார் துரோகி பழனிசாமி என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது., பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!