2026 தேர்தல்..! 3 நாட்கள் மது கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..!
இன்று முதல் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.
வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் வாக்குப்பதிவை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளும் ஏப்ரல் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் முழுமையாக மூடப்பட உள்ளன. இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தேர்தல் செயல்முறையில் ஏற்படக்கூடிய எந்தவிதமான தவறான செல்வாக்கையும் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கையாகும். இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 135C-ஐ அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக பிடியில் முழுமையாக சிக்கிய அதிமுக..! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
இதன்படி, வாக்குப்பதிவு முடியும் நேரத்துடன் முடிவடையும் 48 மணி நேர காலத்திற்குள், எந்தவொரு மதுபானமும் விற்பனை செய்யப்படவோ, விநியோகிக்கப்படவோ கூடாது. இந்தத் தடை ஹோட்டல், உணவகம், தவற்ன், கடை அல்லது பொது அல்லது தனியார் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஏப்ரல் 21-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு வரை இந்தத் தடை அமலில் இருக்கும்
.
இதையும் படிங்க: காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!