வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளின்போது, முந்தைய பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், பலர் தங்கள் பெயர் வரைவு பட்டியலில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தகையோர் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க விரும்பினால், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் அல்லது சேர்க்கைகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புபவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஜனவரி 18, 2026 ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தால், தகுதியானவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.படிவம் 6-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகப் பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்ட்டல் (voters.eci.gov.in) அல்லது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இணையதளம் (elections.tn.gov.in) வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: பாமகவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி புகார்...!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பத்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க 1211 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நாளை 4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!