#BREAKING: மார்ச் 16ல் மாநிலங்களவை தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களின் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகின்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவின் நான்கு இடங்களும் அதிமுக சார்பில் இரண்டு இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அந்த ஆறு இடங்களும் காலியாகின்றன. தமிழக சட்டமன்றத்தில் தற்போது உள்ள எண்ணிக்கை அடிப்படையில் இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நடக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வாக இருக்கும். இந்த ஆறு இடங்களில் தற்போது பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக சார்பில் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராசு, கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதிமுக சார்பில் எம்.தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்து வெளியேற உள்ளனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கம்: SIR பணியின்போது குளறுபடி..!! 7 பேர் சஸ்பெண்ட்..!! எலக்ஷன் கமிஷன் அதிரடி..!!
தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தற்போது பெரும்பான்மை இருப்பதால், நான்கு இடங்களை அவர்கள் எளிதாக வென்றெடுக்க முடியும். ஒரு இடத்திற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், திமுக கூட்டணியின் வலிமை இதை உறுதி செய்கிறது. மீதமுள்ள இரண்டு இடங்களை அதிமுக தரப்பு கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. ஆனால், கூட்டணி அரசியல் மாற்றங்கள், சிறிய கட்சிகளின் ஆதரவு போன்றவை இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஓட்டும் ரன் போல..! இந்திய தேர்தல் ஆணையம் நூதன விழிப்புணர்வு...!