×
 

காலையிலேயே குவிந்த அதிகாரிகள்; பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் ஆகாஷ் வீட்டில் தற்பொழுது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

 டாஸ்மார்க் முறைகேடு வழக்கு தொடர்பாக  பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்ததுறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில அதன் தொடர்ச்சியாக சென்னை தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர் ஆகாஷ் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்ததுறை சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. 

தனுஷ் நடிப்பில் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இவருடைய திருமணத்தில்  பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் வாரிசுகள் என பல்வேறு திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவர் ஒரு அமைச்சருடைய உறவினர் என்றும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ₹100 கோடி வக்ஃபு சொத்து மோசடி..! ED அதிரடி சோதனை..!

 இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவது எதற்காக என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.  இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு தொடர்புடைய இடங்களில் தான் இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது எஸ்என்ஜே குரூப்ஸ் ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை அடிப்படையாக வைத்து இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நீண்டு கொண்டே செல்கிறது. 

தியாகராய நகரில் இருக்கக்கூடிய அபார்ட்மெண்ட்  ஒன்றில் வசித்து வரக்கூடிய கேசவன் என்பவரது வீட்டிலும் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதேபோல தேனாம் பேட்டையில் இருக்கக்கூடிய தொழிலதிபர் தேவகுமார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டில் தொழிலதிபர் பாபு என்பவரது வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. டாஸ்மாக் முறைகேடு வழக்கை அடிப்படையாக வைத்துதான் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவதாக அமலாக்கத்ததுறை வட்டாரங்கள் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: சேகர் ரெட்டி உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட அமலாக்கத்துறை; 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share