×
 

சிங்கப் பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி உடையதா.? தெம்பு, திராணி இருக்கா..? இபிஎஸ் கேள்வி..!

முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவலை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது என்றார்.

மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது என்றும் கூறினார். சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார். உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா? என்று முதல்வர் விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

“அமைச்சருக்கு தெரியும், மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார். 

இதையும் படிங்க: அதிமுகவுடன் இணையும் அமமுக..? நடக்கப்போவது என்ன..? டிடிவி தினகரன் பேட்டி..!

சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் என்றும் பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? எனவும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் அப்போ கொடுத்த பணம்?! எப்போ திரும்ப வரும்?! அதிமுக தலைமையிடம் வேட்பாளர்கள் போர்க்கொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share