×
 

மக்கள் உயிர் பயத்திலேயே வாழணுமா? தமிழ்நாடு தவித்தது போதும்... இபிஎஸ் திட்டவட்டம்...!

போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் முதலமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கே. சூரஜ் என்பவர், நான்கு 17 வயது சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை படுத்தியது. இந்த நிலையில் மற்றொரு சம்பவம் திருத்தணியில் நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். 

போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா என்றும் தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதையும் படிங்க: நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை அமையட்டும்... EPS ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன என்று கேட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றும் நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும் எனவும் தெரிவித்தார். 2026 இல் விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: என்னது கஞ்சா நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மா. சு..! விளாசிய இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share