×
 

வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆவடியில் இருந்து அதிரடியாக தொடங்கியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று (பிப்ரவரி 21) ஆவடியில் இருந்து தொடங்கியுள்ளார். "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த சூறாவளிப் பயணம், கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் நடைபெறும் சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இடையே 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகளும், பிரசார உத்திகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. ஏற்கனவே முதற்கட்ட பயணத்தில் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளை சந்தித்து முடித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது வட தமிழக தொகுதிகளை குறிவைத்து தனது திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இன்று திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி தொகுதியில் தொடங்கிய இந்த பிரசாரம், தொடர்ந்து அம்பத்தூர் தொகுதியில் திறந்த வேனில் நின்றபடி மக்களிடையே ஆதரவு திரட்டியது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் திமுகவின் வலுவான கோட்டையாக இருந்தாலும், அதிமுகவின் பாரம்பரிய செல்வாக்கை மீட்டெடுப்பதும், புதிய வாக்காளர்களை கவர்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஆளுங்கட்சியின் கொள்கைகளை விமர்சித்து, அதிமுக ஆட்சிக் கால சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பிரசாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளை (பிப்ரவரி 22) மாதவரம் மற்றும் பொன்னேரி தொகுதிகளில் தொடரும் பயணம், பிப்ரவரி 25 அன்று மதுரவாயல், பூந்தமல்லி, பிப்ரவரி 26 அன்று தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 21 முதல் 25 வரை திருவள்ளூர் மாவட்டத்திலும், 27-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலும் தீவிர சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகளில் அதிமுகவுக்கு உள்ள பாரம்பரிய வாக்கு வங்கியை தக்கவைப்பதோடு, புதிய ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக தரப்பில் மண்டல வாரியான பயிற்சி முகாம்கள், மகளிர் அணி மாநாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. தேமுதிக அணி தாவல், ஓ. பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது போன்ற சமீபத்திய நிகழ்வுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி தொடக்கம், மற்ற கட்சிகளையும் வேகப்படுத்தியுள்ளது. ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அட்டவணையை அறிவிக்கலாம் என்பதால், பிரசார வேகத்தை அதிகரித்துள்ள எடப்பாடி, மக்கள் நலத் திட்டங்கள், மாநில உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தி பேச உள்ளார். இந்த இரண்டாம் கட்ட பயணம் தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தொண்டர்களின் உற்சாகத்துடன் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. 

இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share