×
 

அதிமுக-வை விட்டு சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! மாற்று கட்சியினருக்கு எஸ்.பி. வேலுமணி அழைப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு, நடிகர் விஜய் உடனான நட்பு மற்றும் அதிமுகவின் உட்கட்சி நிலவரம் குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையாற்றினார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் விஜய் உடனான தனது நட்பு மற்றும் அதிமுகவின் பலம் குறித்து அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு. ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது நான்தான் அவரை நேரடியாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன்" எனத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்துப் பேசிய அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே (மாற்றுக் கட்சிகளில்) உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர். அவர்களின் பெயரை இப்போது என்னால் சொல்ல முடியாது என அதிரடியாகத் தெரிவித்தார்.

திமுகவில் தொண்டர்களுக்குச் சிறிதும் மதிப்பு இல்லை எனச் சாடிய வேலுமணி, சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளது. ஆனால் ஒரு நல்ல தலைவனாகத் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும் உள்ளது எனப் புகழாரம் சூட்டினார். ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் தான் என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கியக் காரணம் என்பதையும் அவர் மேடையில் நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க: ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்! தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!

இந்த விழாவில் திரளான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, மற்றக் கட்சிகளிலிருந்து அதிமுக-விற்குத் திரும்பத் தயாராக இருப்பவர்கள் குறித்த வேலுமணியின் பேச்சு, தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கணக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share