×
 

ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

செங்கல் சூளை நடத்துபவர்கள் இடம் மாமுல் தர வேண்டும் என மிரட்டிய தவெக ஒன்றிய செயலாளர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார்

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கட்டாய மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக எழுந்துள்ள புகார் அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் செங்கல் சூளைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தங்களை தவெக நிர்வாகிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சூளைகளுக்கு நேரடியாகச் சென்று மாமூல் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வேலூர்மாவட்டம் கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்துபவர்களிடம் கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் தவெக நிர்வாகிகள் லோகேஷ்  ஈஸ்வரன் ஆகியோர் சென்று  ஆட்சியில் நாங்கள் தான் உள்ளோம் எங்களுக்கு நீங்கள் மாமூல் தரவேண்டும் என  மிரட்டி உள்ளனர். இதனை வீடியோ ஆதாரத்துடன் செயலாளர் செங்கல் சூளை உரிமையாளர்கள் சண்முகம் சண்முகம் தினகரன் சுனில் குமார்  ,ரமேஷ் மற்றும் சுமன் ஆகியோர் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகியோர் வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களைச் சந்தித்து, கட்சி வளர்ச்சி நிதியாக கட்டாயமாகப் பெரும் தொகையை மாமூலாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த சில உரிமையாளர்களை, "ஆட்சியில் இருப்பது எங்கள் கட்சி, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் சூளைகளை நடத்த விடமாட்டோம்" என ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share