×
 

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

தவெக தலைமையே சொல்லிவிட்டது இனியாவது அக்கட்சி நிர்வாகிகள் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் விஜய் அரசு மருத்துவமனைகள், அம்மா உணவகம், டாஸ்மாக் என துறை ரீதியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை  வழங்கியுள்ளார். இதனையடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அதாவது அரசு பிரதிநிதிகள் இல்லாத சிலரும் ஆய்வு மேற்கொள்வதாக சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது வெடித்துள்ளது.  அதனை கண்டித்து நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்து சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

அதாவது தமிழக அரசு சார்ந்த விஷயங்களில் பொறுப்பில் இல்லாத நிர்வாகிகள் தலையிடக்கூடாது என அறிவுறுத்தல்களை வெளியிட்டுருக்கிறார். நம்முடைய கட்சியில்தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய தலைமையில மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததை மக்கள் மனங்குளிர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். இந்த சூழலில் நமக்கான பொறுப்புணர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனவும், நமது கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே மக்கள் சேவையை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே கட்சி தோழர்கள் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அதே நேரத்தில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். 

நம் கட்சிக்கும் முதலமைச்சருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் அவருடைய நற்பெயருக்கும் எந்த விதத்திலும் கலங்கம் ஏற்படாத வகையிலும் நடந்து கொள்வது நம் தலையாய கடமையாகும். எனவே கட்சி நிர்வாகிகள் மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாறாக மக்கள் பிரதிநிதிகள் அல்லாத கட்சி நிர்வாகிகள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு பிறப்பித்தார். 

இதையும் படிங்க: பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

தவெக தலைமையே சொல்லிவிட்டது இனியாவது அக்கட்சி நிர்வாகிகள் அடக்கி வாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி 15வது மண்டலக்குழு அலுவலக கூட்டத்தில் தவெகவினர் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15ஆவது மண்டல குழு அலுவலகத்தில் இன்று மாதாந்திர கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். எந்த ஒரு அரசியல் கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி கலந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தினரும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்கும் பணியிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல தவெகவைச் சேர்ந்த ஒருவர் மைக்கை பிடித்து அரசு ஊழியர்கள் மத்தியில் சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதும் தற்பொழுது பேசு பொருளாக உருவெடுத்திருக்கிறது. அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடைபெறும் கூட்டத்தில் தவெகவினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி உள்ளே புகுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள் போன்று அதிகாரம் செய்வது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share