ஒரே லிங்க்.. தொட்டதும் பட்டுனு பறந்த பணம்.. பதறி அடித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்!
செல்போன் எண்ணுக்கு வந்த போலி லிங்கை கிளிக் செய்ததால் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோனதாக காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும், வங்கி கணக்கு புதுப்பிக்க வேண்டும், ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது, பரிசு வென்றீர்கள் என பல்வேறு விஷயங்களை கொண்டு சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களை குறி வைத்து இது போன்ற குற்றங்கள் நடத்தப்படுகிறது.
செல்போன்களுக்கு காவல்துறை போன்றும் வங்கிகளில் இருந்து மெசேஜ்கள் அனுப்பப்படுவது போல போலி கணக்குகளை வைத்து லிங்க் அனுப்பி பணம் மோசடி நடைபெறுகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் ஆங்காங்கே சைபர் குற்றங்கள் நடக்க தான் செய்கின்றன.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 பேர் பலியான பெரும் சோகம்!
இந்த நிலையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு செல்போனில் போக்குவரத்து காவல்துறை போல் ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை உண்மை என நம்பி அவர் கிளிக் செய்துள்ளார். உடனடியாக அவரது போன் ஹாங் ஆகியுள்ளது. பின்னர் அவரது செல்போனுக்கு ஓடிபி ஒன்று சென்றவுடன், வங்கி கணக்கில் இருந்து 12,600 ரூபாய் போனதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் தான் கிளிக் செய்தது போலி லிங்க் என்ற உணர்ந்து, உடனடியாக சைபர் கிரைம் மோசடி புகார் எண் 1 9 3 0 மற்றும் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலி லிங்க் அனுப்பி மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சைபர் குற்றங்கள் நடப்பது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!