×
 

விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனைகள் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு வெற்றிக் கழகம், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அந்த வாக்குறுதிகளிலிருந்து மாறுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

முதற்கட்டமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சிறு விவசாயிகள் 50,000 ரூபாய் வரை பெற்றிருந்த கடன்களுக்கு முழு தள்ளுபடியும், குறு விவசாயிகளுக்கு அதில் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. மேலும், கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிலைகளில் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

இதையடுத்து, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து 75,000 ரூபாய் வரை கூட்டுறவு பயிர்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக ₹5,932.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

எனினும், புதிய நிபந்தனைகள் விவசாயிகள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரே குடும்பத்தில் பலர் கூட்டுறவு கடன் பெற்றிருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருந்தால் ஒரு கணக்கிற்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானவை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நில அளவை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்குவதாக கூறிய நிலையில், தற்போது கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படுவது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் மொட்டை அடித்தும், மண் சோறு சாப்பிட்டும், திருவோடு ஏந்தியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் 45 முதல் 60 நாட்களுக்குள் முழுத் தொகையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை காரணமாக முழுமையான தள்ளுபடியை உடனடியாக வழங்க இயலவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் தொடர்கிறது. அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, மேலும் சாதகமான முடிவுகளை எடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share