ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!
புலி பட வருமான மறைப்பு விவகாரத்தில், வருமான வரித்துறையின் அபராதத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்குகிறார்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் அவர்களுக்கு, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்குகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்க்கு, இந்தச் சட்டப் போராட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் போது, நடிகர் விஜய்யின் இடங்களில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில், அவர் தனது 2015-16 நிதியாண்டுக்கான வருமானத்தில் ரூ.15 கோடியைக் கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதனடிப்படையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!
இந்த வழக்கின் விசாரணையின் போது விஜய் தரப்பில், அபராதம் விதிக்கப்பட்டக் காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், வருமான வரித்துறை தரப்போ, "சோதனை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இந்த வருமானம் வெளியே தெரிந்திருக்காது, எனவே அபராதம் செல்லுபடியாகும்" என வாதிட்டது.
இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் இன்று காலை 10:30 மணியளவில் தனதுத் தீர்ப்பை அறிவிக்கிறார்.
சமீபத்தில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பானப் பணிகளைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, இந்தத் தீர்ப்புச் சாதகமாக அமையுமா அல்லது அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்குமா என்பது அவரது ஆதரவாளர்களிடையேப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!