×
 

தமிழகத்திலேயே முதல் முறை... இந்த குற்றவாளி மீது பாய்ந்தது ‘குண்டர் சட்டம்’...!

தமிழகத்தில் முதன் முறையாக பொருளாதார குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தமிழகத்தில் பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு 08.07.2025 அன்று வெளியிட்ட அரசாணையில் பொருளாதர குற்றவாளிகளையும்  தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச்சட்டம். 1982 (1982-ன் சட்டம் 14) (குண்டர் தடுப்புச் சட்டம்)-ன் கீழ் கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் முதன் முறையாக 239 பொதுமக்களிடம் தலா ரூ 5,18,000 /- வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாக பெற்று  மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மரக்கார் பிரியாணி  மேலாண் இயக்குநர் கங்காதரன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்' ட்ட "மரக்கார் பிரியாணி", "Drool door India private limited" மற்றும் "Cathel Cafe" ஆகிய நிறுவனங்களை துவக்கி பங்கீட்டு அடிப்படையில் (Franchise-based) பங்கீட்டு உரிமம் வழங்குவதாகவும் அதன் பேரில் மேற்படி பிரியாணி கடைகளை நிறுவனமே நிர்வகித்து வருமானத்தில் 10% மற்றும் மாதந்தோறும் ரூபாய் 50,000 லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை பொதுமக்களுக்கு தெரிவித்து 21 இடங்களில் மாதிரி கடைகளை திறந்து பொதுமக்களை நம்ப வைத்து தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 239 பொதுமக்களிடம் தலா ரூ 5,18,000 /- வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாக பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!

மேற்படி, முதலீட்டு பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்தாமலும் இருந்து மோசடியில் ஈடுபட்ட மேற்படி "மரக்கார் பிரியாணியின்" நிறுவனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள விஜயரங்கபுரத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் மகன் கங்காதரன் மற்றும் அவரது மனைவி மரியநாயகம் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 02/2025-ல் வழக்கு பதிவு செய்து  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்படி முதன்மை குற்றவாளி கங்காதரன்*-ஐ 07.07.2025 அன்று கைது செய்து விருதுநகர். மாவட்ட சிறையில் அடைத்தனர்.

 மேற்கண்ட வழக்கின் முதன்மை குற்றவாளி கங்காதரனை குண்டர் தடுப்பு சட்டம் 14/1982-ன் கீழ் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா 02.08.2025 அன்று ஆணை பிறப்பித்தார். குற்றவாளி கங்காதரனை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் சார்வு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு மேற்கூறிய வழக்கில் முக்கிய பொருளாதார குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததின் மூலம் பொருளாதார குற்றத்திற்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்நடவடிக்கையானது பொருளாதார குற்றங்களில் மீண்டும் ஈடுபட குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share