×
 

பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருந்த பாம்பன் மீனவர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 22, 2026 அன்று இரவு மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகில் இருந்த 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையின் தொடர் அத்தியாயமாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாம்பன் மீனவர் சங்கங்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, கே. டேவிட் என்பவருக்கு சொந்தமான மெக்கானைஸ்டு டிராலர் படகு ஒன்று பாம்பன் தெற்கு வாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இந்தப் படகில் 12 மீனவர்கள் இருந்தனர். 

கபில் ரோச்சர், ஆண்டனி, அஜித், பிரான்சிஸ், ஜான்சன், ரீகன், ஆண்டனி ருவிஸ்டன், பிரிஷ்பான், கிளெய்மண்ட், பெரிய கருப்பன், செர்சன் உள்ளிட்டோர். அவர்கள் கட்சத்தீவு மற்றும் மன்னார் நீர்நிலைக்கு இடையே உள்ள பால்க் நீரிணைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். 

இதையும் படிங்க: ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை நீர்ப்பகுதியில் மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டினர். படகு மற்றும் மீனவர்கள் இருவரும் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுதலையாகி உள்ளனர். பாம்பன் மீனவர்கள் 12 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. 

இதையும் படிங்க: குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share