செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! பெருமைமிக்க தருணம்... முதல்வர் பெருமிதம்
யுனெஸ்கோவின் உலக புராதான சின்னமாக செஞ்சிக்கோட்டை அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான செஞ்சி கோட்டைbதென்னிந்தியாவின் பெருஞ்சுவர் என்றும், கிழக்கின் ட்ரோய் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 1200-இல் கோனார் வம்சத்தைச் சேர்ந்த அனந்த கோனால் இந்த கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. பின்னர், இவரது வழிவந்த கிருஷ்ண கோன் இதை விரிவுபடுத்தினார். சோழர் காலத்தில் "சிங்கபுரி" என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்னர் "செஞ்சி" என்று மருவியது. இந்தக் கோட்டை பல்வேறு ஆட்சியாளர்களான விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், ஆற்காடு நவாபுகள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இதை இந்தியாவின் மிகவும் கைப்பற்ற முடியாத கோட்டை என்று புகழ்ந்தார். ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க் ஆகிய மூன்று மலைகள் மற்றும் இரண்டு சிறிய குன்றுகளை இணைக்கும் 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. 80 அடி அகலமுள்ள அகழிகள், 60 அடி உயரமுள்ள மதில்கள், செங்குத்தான மலைப்பகுதிகள் மற்றும் இயற்கையான காடுகளால் இது மிகவும் பாதுகாப்பான கோட்டையாக உள்ளது. 800 அடி உயரம் கொண்ட ராஜகிரி மலை மற்றும் கிருஷ்ணகிரி மலையில் அமைந்த கோட்டைகள் செங்குத்தான பணிகளோடு அமைந்துள்ளது. பிரெஞ்சு, டச்சு மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணிகளின் கலவையை இங்கு நம்மால் காண முடியும். தமிழ்நாட்டின் பண்பாட்டு மற்றும் வரலாற்று அடையாளமாக உள்ள செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோவின் உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். "கிழக்கின் ட்ராய்" என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சிக்கோட்டை இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது தமிழ்நாட்டின் பெருமைமிக்க UNESCO தளங்களின் பட்டியலில் இணைகிறது என்றும்கிரேட் லிவிங் சோழர் கோயில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவை இதில் அடங்கும் என்றும் கூறினார். தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆண்டுக்கு ரூ.5,400 கோடி சுருட்டல் முதல் இன்பநிதி என்ட்ரி வரை - திமுகவை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி...!
இதையும் படிங்க: #ATS: ரொம்ப பெருமையா இருக்கு.. உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறை முன்னணி.. முதல்வர் பெருமிதம்..!