×
 

பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனிராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனிராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனிராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். 

பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல் இருப்பதாகவும் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா என்றும் இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதையும் படிங்க: தலைவிரித்தாடும் ரவுடிகள் அட்டகாசம்... அலறி ஓடும் மக்கள்... EPS கடும் தாக்கு...!

பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே., இது உங்களை உறுத்தவில்லையா என்றும் சாடினார். ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: "பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்..." - பாயிண்ட்களை அடுக்கி பதிலடி கொடுத்த ஜி.கே.வாசன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share