×
 

இரும்பு வியாபாரி வீட்டில் விடிய விடிய தொடர்ந்த சோதனையில் திடுக்கிடும் திருப்பம்... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... மொத்தம் இவ்வளவா?

இரும்பு வியாபாரியின் வீட்டில் பூட்டை உடைத்து் போலீசார் முன்னிலையில் GST புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை.

இரும்பு வியாபாரியின் வீட்டில் பூட்டை உடைத்து் போலீசார் முன்னிலையில் GST புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த எல்லை மேடு பகுதியில் செல்வகுமார் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஆறு வருடங்களாக அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை.

 இந்நிலையில் அவரது வீடு மற்றும் நிறுவனத்தில் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் நேற்று மாலை சோதனை நடத்த வந்தனர். இதனை அறிந்த செல்வகுமார் வீட்டை பூட்டிவிட்டு தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.  இதனை அடுத்து சென்னிமலை போலீசாரின் உதவியுடன் கோவையில் இருந்து வந்திருந்த ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் செல்வக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.் 

இதையும் படிங்க: கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

இதனை அடுத்து சிகிச்சைக்குச் சென்ற செல்வகுமார் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அவரது வீட்டில் இரவு முழுவதும் விடிய விடிய நடந்த சோதனை தற்பொழுதும் நீடித்து வருகிறது.

இந்த சோதனையில் எட்டு கோடி ரூபாய் ரொக்க பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர் இதன் பேரில் தற்பொழுது செல்வகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும் பணம் கைப்பற்றியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
 

இதையும் படிங்க: வாங்க CM..! கரூருக்கு சென்ற முதல்வர் விஜய்...! ஆர்ப்பரிக்கும் மக்கள்..! ஸ்தம்பித்த சாலைகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share