×
 

துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? - பகீர் கிளப்பும் தகவல்..!

பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தகவல். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் காப்பர் உருக்கு ஆலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்து சிதறி பிகாரை சேர்ந்த தொழிலாளி  உயிரிழப்பு. 7 வட மாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தகவல். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான இரும்பு மற்றும் காப்பர் உருக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தனியார் காப்பர் உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது.

பர்னஸ் வெடித்து சிதறியதில் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கான தொழிற்சாலையின் மேற்கூரை உள்ளிட்டவை சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது. இந்த விபத்தில் அங்கு இரவுப் பணியில் இருந்த பிகாரை சேர்ந்த ரவி ரஞ்சன்(26) என்ற தொழிலாளி உடல் பாகங்கள் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த வட மாநிலத்தை சேரந்த 7 பேர் இரும்பு குழம்பு சிதறி படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க: #BREAKING கும்மிடிப்பூண்டியில் மீண்டும் அதிபயங்கரம்... உடல் சிதறி மரணம்... பலரின் நிலை என்ன?

இது குறித்து தகவல் அறிந்து 2 வாகனங்களில் வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் பர்னஸ் கொதிகலன் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனர் என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 7 வட மாநில தொழிலார்கள் மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்த ரவி ரஞ்சனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையின் வாயிலில் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் அதிகாலை விபத்து ஏற்பட்ட போது பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாகவும், தொழிற்சாலையில் இருந்து நச்சுக்கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழலை பாதித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை தொழிற்சாலை நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை என்றும் கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை தீயணைப்புத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
 

இதையும் படிங்க: சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share