உஷார் மக்களே..! வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்; தமிழகத்திற்கு மிக முக்கிய அலர்ட்!
வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்றே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த வகையில வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்ல நிலவிய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் அதே பகுதியில தற்போது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் வருகின்ற 30 ஆம் தேதி வரை தமிழகத்தில ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில், ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இன்றைய தினம் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மைய மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தினுடைய மலைப்பகுதிகள் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் அறிவிப்பு என்பது நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழையால் நேர்ந்த விபரீதம்; கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் - பயணிகள் நிலை என்ன?
அந்த வகையில அடுத்த நான்கு முதல் ஐந்து தினங்களுக்கு பரவலாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. அனைத்து பக்கமும் இதற்கு தடை.. அதிரடி உத்தரவால் மக்கள் அவதி..!