தமிழகமே அதிர்ச்சி.. அனைத்து பக்கமும் இதற்கு தடை.. அதிரடி உத்தரவால் மக்கள் அவதி..!
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து இதமான மழை பெய்து வந்த போதிலும் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதலே பெய்து வரும் கனமழையால் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்குள்ள அருவிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆழியாறு கவி அருவியில் வெள்ளப்பெருக்கு:
கோவை நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.தொடர் கன மழை காரணமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிற்றருவிகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது இந்நிலையில் ஆழியார் பகுதியில் உள்ள கவி கவி அருவியில் நேற்று தண்ணீர் வரத்து காணப்பட்டது.
இதையும் படிங்க: பயமுறுத்தும் பேய் மழை..! 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்றும் இரண்டாவது நாளாக ஆழியார் கவி அருவியில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.மேலும் செந்நிறமாக வரும் தண்ணீரில் கற்கள், குச்சிகள், மரக்கிளைகள் என பல்வேறு பொருட்களும் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன.கடந்த ஐந்து மாதங்களாக கோடைகாலத்தில் வறட்சி காரணமாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் கவி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கனமழை எதிரொலி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்க தடை:
கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவ மழை தமிழகத்திலும் அதே வேளையில் தொடங்கி இருக்கிறது. 16 நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய இந்த மழை தென் மாவட்டங்களில் தான் அதிக அளவில் பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து இதமான மழை பெய்து வந்த போதிலும் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கரைகளில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்
சுருளி அருவி:
தேனி மாவட்டத்தில் கம்பம் கூடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் சுருளி வனப்பகுதியான மேகமலை, ஹைவேவிஸ் , இரவங்கலாறு போன்ற பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் அருவியல் குளிப்பதற்கு இன்று தடை விதித்துள்ளனர்.
திருமூர்த்தி மலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் பஞ்சலிங்க அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அமணலிங்கேஸ்வரர் ஆலயம் அருகே தடுப்புகள் அமைத்து கோவில் நிர்வாகத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெட் அலர்ட் எதிரொலி.. பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பறந்த எச்சரிக்கை..!