×
 

"விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

தமிழகத்தில் தற்போதைய விஜய் தலைமையிலான அரசு ஒரு 'திருச்சபை மாடல்' அரசாகச் செயல்படுகிறது என்று இந்துத் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

"தமிழ்நாட்டில் தற்பொழுது அமைந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, ஒரு 'திருச்சபை மாடல்' அரசாகச் செயல்படுகிறது" என்று இந்துத் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள கையிருப்புப் பணம் குறித்துத் தவெக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துத் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் மற்றும் இந்துப் புரட்சி முன்னணி நிறுவன தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம.ரவிக்குமார், "கடந்த திமுக ஆட்சியைத் திராவிட மாடல் அரசு என்றார்கள்; தற்போதைய விஜய் ஆட்சியைத் திருச்சபை மாடல் என்கிறோம். இவை இரண்டுமே வெவ்வேறு முகமூடிகளை அணிந்த ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். தமிழ்நாட்டில் பதவியேற்பவர்கள் பைபிள் வசனம் சொல்வதும், உயர் பதவிகளில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் இருப்பதும் இந்த லயோலா கல்லூரி தயாரிப்பான திருச்சபை மாடலுக்குச் சான்றாகும்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு ஸ்வப்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த அரசு அந்த அதிகாரியை மாற்றியுள்ளது. சாதியை ஒழிப்பதாகக் கூறும் வீரமணி சாதி அரசியல் செய்கிறார். முந்தைய திமுக அரசு பொறுப்பேற்ற போது கோயில்களில் எவ்வளவு பணம் இருந்தது, தற்போது எவ்வளவு கையிருப்பு உள்ளது என்பது குறித்துத் தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்களில் நுழைந்து ஆய்வு செய்வது சட்டவிரோதமானது" என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

மேலும், "குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலும் முதலமைச்சர் இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயலும் காங்கிரஸை முதல்வர் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகளின் பயிர்க்கடனை இன்னும் தள்ளுபடி செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவைத் தவெக அரசு பின்பற்ற வேண்டும்; முருக பக்தர்களை விரோதித்ததால் திமுக காணாமல் போனது, தவெக அரசும் இதைப் பின்பற்றினால் அதே பலனை அனுபவிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.

 

இதையும் படிங்க: 10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share