×
 

எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..! CBI பயம் தான்... விஜயின் கரூர் பயணத்தை விமர்சித்த லியோனி..!

முதல்வர் விஜயை ஐ.லியோனி விமர்சனம் செய்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்திற்குப் பிறகு, முதல்வராக அவர் கரூருக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது. இந்த நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் அமைந்தது.

சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.vஇந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். கரூர் சம்பவம் நடந்த போது மக்களைவிட்டு ஓடிப்போய் பயந்து வீடியோ வெளியிட்டவர் என்று ஐ.லியோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உங்க சோகத்தை தான் நாங்க பாத்தோமே..!! தளபதி கச்சேரி டான்ஸ் போட்டு கிழித்த திமுக..!!

CBI வழக்கில் தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது, அம்மோனியா வாயுக்கசிவினால் 17 பேர் இறந்தவர்களை நேரில் கூட சென்று பார்க்காதவர் என்று தெரிவித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்திக்க போகிறோம் என்ற பயத்தில் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் நியாயத்தின் பக்கம் மக்கள் நின்று திமுகவை வை இடைத்தேர்தலில் வெற்றி பெறவைப்பார்கள் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: கரூரில் CM விஜய் மாஸ் மூவ்... 31 அரசு வேலைக்கான ஆணை..! பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share