"பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் இசை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அந்த மாமனிதர், இன்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தனது இசையின் மூலம் உயிரோடு இருக்கிறார். ஜூன் 2, 2026 அன்று, அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் முழு தமிழகமும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் என்று கூறினார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நன்றி கோரி ஆடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் இசை பல தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாகவும் ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்க்கை இறந்த நிலையில் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!