இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மின்வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!
இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்
கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்த போகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் விபத்துகளைத் தவிர்க்கத் தங்களது மின் இணைப்பில் எர்த் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCB) தவறாமல் நிறுவ வேண்டும். அனைத்து மின் இணைப்புகளும் ஆர்.சி.டி. (RCD) பொருத்தி மின் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. (ISI) முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
இண்டக்ஷன் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் (Earthing) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: வெற்றி தலைவர் விஜய் அதிரடி! தமிழக வெற்றிக் கழகத்தின் 264 வேட்பாளர்கள் அறிமுகம்!
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் முன்பு கட்டாயம் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய அதிக மின்திறன் கொண்ட மின்சாதனப் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியை முதன்மை மாநிலமாக்குவோம்! தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத் தொடக்கம்!