×
 

கூட்டணி பிளவு.. அரசியல் பரபரப்பு... டெல்லியில் தொடங்கிய இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்..!!

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இன்று இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறும் இந்தக் கூட்டம், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், பாஜக தலைமையிலான என்.டி.ஏ. அரசுக்கு எதிராகப் பொதுவான உத்தியை வகுக்கவும் நடைபெறுகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிவித்தபடி, 23 அரசியல் கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. இந்தக் கூட்டம் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சில கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், கூட்டணிக்குள் சில பதற்றங்கள் தெரிய வருகின்றன. 

ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த நிலையில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. என்ற நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துவிட்டது. இந்தியா கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எம்பிக்களை பெற்றிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: குற்றங்களுக்கு கடிவாளம்... சட்டம் ஒழுங்கு அலர்ட்... அதிரடி ஆக்ஷனில் முதல்வர் விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share