×
 

குற்றங்களுக்கு கடிவாளம்... சட்டம் ஒழுங்கு அலர்ட்... அதிரடி ஆக்ஷனில் முதல்வர் விஜய்..!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதல்வர் விஜய் என்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

சமீப காலமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள், கொலை வழக்குகள் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் புதிய முதலமைச்சர் விஜய் இன்று உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன. முதலமைச்சர் விஜய், அதிகாரிகளிடம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி, குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் உடனடி கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!

குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு சட்டம் ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share