×
 

போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் கேட்டுப் போராடி வரும் பெரம்பலூர் எம்ஆர்எஃப் நிறுவனத் தொழிலாளர்களைக் காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொழிலாளர் நல உள்கட்டமைப்பு, தொழிற்துறை நிர்வாக மேலாண்மை மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த புள்ளிவிவர விபரங்கள் மாநில அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், செந்தமிழன் சீமான் இக் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பெரம்பலூரில் அமைந்துள்ள எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தராமல் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!

தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச் சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களை ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய சீமான், நாங்கள் மக்களைக் காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த புனிதர்கள் எனத் தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள், உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல் பெருநிறுவனத்திற்குத் துணைபோவது பெருந்துரோகம் எனச் சாடினார்.

தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் உடனடியாகக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share