×
 

#BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

அம்பாசமுத்திரம் அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமா செய்தார்.

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பான மாற்றங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்கு அருகில் ஆட்சி அமைத்த நிலையில், அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் அணிமாறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.

இந்தச் சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனிடையே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 

இசக்கி சுப்பையா, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர். 2019ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிமுகவுக்குத் திரும்பிய பின்னர், 2026 தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுமார் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது, அதிமுகவுக்கு முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்டது. 

இதையும் படிங்க: தவெக-வின் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிளவு., குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணிக்கும் இடையிலான மோதல் இந்த ராஜினாமா சம்பவங்களுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. நேற்று மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இன்று இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share