×
 

அனுதாப ஓட்டு வேணுமா? பழைய ஆர்எஸ்எஸ் டெக்னிக்..! ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்த ஜூலி..!!

மது பாட்டில் வீச்சு சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனாவை பிக் பாஸ் ஜூலி வம்பு இழுத்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா வேட்பாளராக களம் காணும் நிலையில் அந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மது பாட்டில்கள் வீசப்பட்டது. இதில் பெண் தொண்டர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சி நிர்வாகிகள் கொந்தளித்தனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இங்கிருந்து புறப்பட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் சிசிடிவி காட்சிகளை ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே காட்டினார். இடைத்தொடர்ந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தனர். 

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழக வெற்றி கழகத்தினரே வேண்டுமென்றே ஆட்களை செட் செய்து இது போன்ற நிகழ்வை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்துள்ளார். இன்று உலக முட்டாள்கள் தினம் என்றும் தவெக வல்கர் வாரியர்ஸ் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு உகந்த தினம் என்றும் ஜூலி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். தனது வீடியோவில் பேசிய ஜூலி, நேற்று அண்ணன் ஆதவ் அர்ஜுனா ஆரம்பிச்சுட்டாரு போல என்றும் இது பழைய காலத்து ஆர்எஸ்எஸ் டெக்னிக் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... போர்க்கொடி தூக்கிய ஆதவ்... குற்றவாளிகளுக்கு சிறை..!!

வட இந்தியாவில் தான் ரயில் முன்பு நின்று கல்வெட்டு எரிந்து இஸ்லாமியர்கள் போல தொப்பி போட்டுக் கொண்டு இதுபோன்ற சேட்டைகளை எல்லாம் செய்வார்கள் என்றும் கடைசியில் விசாரித்துப் பார்த்தால் அவர்களுடைய ஆட்களாக தான் இருக்கும் என்றும் கூறினார். இதையெல்லாம் ஒரு அரசியல் உத்தியாக எடுத்துக்கொண்டு செயல்படுவதா என்று ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து பேசி இருக்கிறார் ஜூலி. திமுகவுக்கு பல தேர்தல் வேலைகள் இருப்பதாகவும் இது தங்களுக்கு திருவிழா போல எனவும் மக்களுக்கான திட்டங்கள் வகுப்பது போன்ற பல வேலைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படிக் குறுக்க மறுக்க ஓடினால் எப்படி என்றும் ஆதவ் அர்ஜுனாவை ஜூலி விமர்சித்துள்ளார். 50 முதல் 60 ஆர் எஸ் எஸ் வேட்பாளர்களை நிறுத்தும்போதே தனக்கு தெரிந்து விட்டதாகவும், தான் முன்பு கூறியது போல ஐம்பதை 500 ஆக்கி அனுதாப ஓட்டுகள் பெறுவதற்கு தான் இப்படி செய்கிறீர்கள் என்றும் கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share