என்ன சொல்லி அழைப்பது எங்கள் திராவிடத் தீயே! கலைஞருக்கு கனிமொழி புகழாரம்!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழி எம்பி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞரின் பிறந்த நாள் செம்மொழி நாடாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நெகிழ்ந்து பேசி உள்ளார். அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது., பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம்.,
இதையும் படிங்க: அறிவுச் சூரியனின் பிறந்தநாள்..! கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!
நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது என்று புகழாரம் சூட்டி உள்ளார். தமிழ் போல் வாழ்க உன் புகழ் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திக்.. திக்.. நொடிகள்.. திடீர் டிரோன் அட்டாக்.. வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்...!