×
 

தமிழ் என் சுவாசம்... உயிராகி நிற்பது தாய்மொழி...! M.P.கமல்ஹாசன் பெருமிதம்..!!

தாய்மொழி நாளில் தமிழ் மொழி குறித்து கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்தார்.

தாய்மொழி என்பது வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல. அது நமது உணர்வுகளின் முதல் தொட்டில். குழந்தை பிறந்து முதலில் கேட்கும் ஒலிகள், தாய் அழைக்கும் போது உள்ளத்தில் ஏற்படும் இன்பம், சிரிப்பு, அழுகை, கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் முதல் வழி அது தான். நமது பண்பாடு, பாரம்பரியம், கதைகள், பாடல்கள், நம்பிக்கைகள் எல்லாம் தாய்மொழியில்தான் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

ஒரு மொழி இறந்தால், அதனோடு ஒரு உலகமே மறைந்து விடுகிறது என்று சொல்வார்கள். உலகில் இப்போது சுமார் ஏழாயிரம் மொழிகள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு மொழி மறைந்து போகிறது என்று கணக்கு சொல்கிறார்கள். இது மிகப் பெரிய இழப்பு.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இன்று தாய்மொழி நாள் என்பதால் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்தார். மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை கட்டாயப்படுத்துங்கள்...! அன்னை தமிழுக்கு துரோகம்... சீமான் ஆவேசம்..!

அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ் என்று கூறியுள்ளார். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம் என்றும் மொழியால் உருவானேன்., மொழிவதால் வாழ்கின்றேன் என்று கூறியுள்ளார். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்... நாடு முழுவதும் டோல்கேட்களில் அதிரடி மாற்றம்...ஏப்ரல் 1 முதல் இந்த முறை ரத்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share