×
 

ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

கரூர் விவகாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா. தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் அவர் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

ஆதார் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் கருத்து கூற தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. விசாரணை வளையத்திற்கு உள்ள அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல் குமார் சம்பவம் குறித்து கருத்து கூற தடை விதியுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share