நான் எந்த தவறும் செய்யல... ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் கே.என். நேரு...!
1020 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை அமைச்சர் நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பணி நியமனங்களுக்காக 888 கோடி ரூபாய் அளவுக்கு "பணத்துக்கு வேலை" மோசடி நடந்ததாகவும் அமைச்சர் கே. என். நேரு மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது. இப்போது 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு, பொது கழிப்பறை கட்டுமானம், சுகாதார சேவைகள், நபார்டு திட்டங்கள், நீர்நிலை புனரமைப்பு போன்ற பல்வேறு ஒப்பந்தங்களில் டெண்டர்களை முன்கூட்டியே தீர்மானித்து, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான விவகாரம் இது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. DGP மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு விரிவான கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மூலம் 7.5% முதல் 10% வரையிலான கமிஷன் வசூலிக்கப்பட்டு, மொத்தம் குறைந்தது 1,020 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1020 கோடி ஊழல்... கே. என். நேருவை விடாதீங்க... அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு...!
இந்த நிலையில், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால், இந்தப் பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இனிமேலும் எந்தத் தவறையும் செய்யமாட்டேன் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இதையும் படிங்க: ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு..! மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்க போகுது... அதிமுக முக்கிய அறிவிப்பு...!