சென்னை இளம்பெண் கொடூர கொலையில் திடீர் திருப்பம்...திடுக்கிடும் தகவல்..
சென்னை கொடுங்கையூர் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவர் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலணியை சேர்ந்த நித்யா என்ற பெண், அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நித்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நித்யாவின் காதலன் பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், நித்யா தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் சந்தோஷ் குமார், நண்பர் முஜுபூர் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆட்டிசம் பாதித்த சிறுவனை கொன்று புதைத்த விவகாரம்... மேலும் ஒருவர் கைது... தொடரும் விசாரணை
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யாவிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு மருத்துவர் சந்தோஷ் குமாரிடம் சிகிச்சை பெற்று வந்ததும், பாலமுருகனுடன் நித்யா இருப்பது பிடிக்காமல் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்..! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!