வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!
எனினும், 10ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவித்தது.
சென்னை: கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவரது உடல்நிலை தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார். 75 வயதான வி.எஸ். பாபு கடந்த புதன்கிழமை வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் சுவாச ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட தேவையான மருத்துவ மேலாண்மை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மருத்துவமனையில் உள்ள பாபுவின் நிலை குறித்து ஆரம்பத்தில் விரிவான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், 10ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவித்தது.
இதையும் படிங்க: V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!
தொடர்ந்து கண்காணிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், அமைச்சர் அருண்ராஜ் நேரில் மருத்துவமனைக்குச் சென்று பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நுரையீரல் தொற்று சிகிச்சை நடைபெற்று வருவதையும், பாபு நலமுடன் இருப்பதையும் உறுதிப்படுத்தினார்.
எனினும், குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் விரிவாகப் பதிலளிக்காமல் புறப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்ற பாபுவின் உடல்நலக் குறைவு தவெக ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது.
தற்போதைய அறிவிப்புகளின் படி அவரது நிலை சீராக உள்ளதால், விரைவில் முழுமையான குணமடைந்து பணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ அறிக்கை வெளியானவுடன் மேலும் விவரங்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: ஐ.சி.யூ-வில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு... தீவிர சிகிச்சை... உடல் நிலை குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!