×
 

முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலி - இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  தென்னிந்திய பஞ்சாலை சங்கம் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வந்தனர். இதையடுத்து பாதிப்பை எதிர்கொள்ள ஒன்றிய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியது. அமெரிக்க வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் தற்போது இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா போரால் மீண்டும் இந்தியா ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர் ஜவுளித்துறையினரின் கோடை கால ஆடைகள் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊடகங்களுக்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் பொதுச்செயலாளர் செல்வராஜ் அளித்த பேட்டியில், இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா போரால் ஜவுளி துறையும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மாதம் வரை போர் நீடிக்கும் என கூறப்படுவதால் ஏற்றுமதி கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க 50 சதவீத வரி விதிப்பால் பல மாதங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த போரால் பாதிப்பு ஏற்பட உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் சுமார் 3 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி செய்யப்பபடுகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் வரி இல்லா ஒப்பத்தம் போடப்பட்டுள்ளதால்  ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த போர் சூழல் காரணமாக நமது ஜவுளி ஏற்றுமதியில் 10 சதவீதம் அப்படியே நின்றுவிடும். 

ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா செல்லும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆப்ரிக்காவை சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் கூடுதலாக 25 நாட்கள், மற்றும்  வாடகை  அதிகரிக்கும். மேலும் போர் காப்பீடு பிரிமியம் அதிகமாகும். கோடைகால ஆடர்கள் இப்போது தான் போகத்துவங்கியுள்ளது. மேலும் சீசனல் ஆடர்களை டெலிவரி செய்வதில் பிரச்சனை உள்ளது.  இதனால் ஆடர்களை கொடுத்தவர்கள் அபராதம் விதிக்கும் சூழல் உள்ளது. ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால் அதற்கான இழப்புகளும் ஏற்படும். டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு ஏற்படுவது போக பாலிஸ்டர் விலையும் அதிகரிக்கும். இந்த தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும். 

இதையும் படிங்க: மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணை விலை தற்போதே சற்று அதிகரித்துள்ளது. தற்போது நம்மிடம் கையிருப்பு இருந்தாலும், விலை ஏற்றம் வராமல் ஒரு மாததிற்கு அரசு சமாளிக்க வேண்டும். இப்போது தான் செயற்கை இழை பயன்பாட்டிற்கு மாறி வருகிறோம். எனவே பாலிஸ்டர் விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். சந்தை மாற்றம் ஏதும் ஏற்படாது, நமது போட்டியாளர்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது என்றார்.
 

இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share