×
 

மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

ஓட்டுக்காக ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று திமுகவின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற பயிற்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தி வரும் சட்டமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியான இலக்கை வலியுறுத்தினார்.

கடந்த தேர்தலில் சில தொகுதிகளில் தோல்வியடைந்த இடங்களை இம்முறை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். திமுகவின் வெற்றிக்கு வாக்குச்சாவடி மட்ட அளவில் உள்ள ஒருங்கிணைப்பும், தொண்டர்களின் அயராத உழைப்பும் மிக முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை நினைவூட்டிய ஸ்டாலின், மக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன என்று பெருமிதம் தெரிவித்தார். இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்கள் கையில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேற்கு மண்டலம் திமுகவின் வலுவான பகுதியாக இருப்பதாகவும், இங்கு கட்சியின் அமைப்பு மிகுந்த வீரியத்துடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டு, அதைத் தக்க வைத்து மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மோடியா, லேடியா என சவால் விட்ட ஜெயலலிதாவை திடீரென மோடி புகழ்கிறார் என்றும் ஜெயலிலதாவை புகழ்ந்தால் வாக்குகள் வரும் எனக் கருதி புகழ்கிறார் எனவும் தெரிவித்தார். அதிமுக கூட்டணியை சர்க்கஸ் கூடாரம் என விமர்சித்தார்.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

அடுத்த மாதம் எங்குப் பார்த்தாலும் உதயசூரியன்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினார். ஒருவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்குக் கேட்கிறப் பிரசாரத்திற்கு, வேறு எதுவும் ஈடாகாது என்று தெரிவித்தார். மேற்கு மண்டலத்தில் கடந்த MP தேர்தலில் பெற்ற வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற வேண்டும் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share