×
 

இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு.

நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத கும்பல் செயல்பட எவ்வாறு காவல்துறை அனுமதிக்கிறது?- நீதிபதி கேள்வி. தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் அகமது ரஃபீக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பூர்விமாகக் கொண்ட நான் சைனாவில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறேன் அதிராம்பட்டினத்தில் எனது தங்கைக்கு சொந்தமான இடம் உள்ளது எனது தங்கையும் தங்கை கணவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் என் தங்கைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வந்தோம் ஆனால் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அசரஃப் அலி உள்ளிட்ட சிலர் எங்கள் இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அவர்களுக்கு 20 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி எங்களை பணிகள் செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

 இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள மேலும் சட்டப்படி நாங்கள் வாங்கிய இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளோம் இது குறித்து அருகில் விசாரணை செய்தபோது இந்த கும்பல் தொடர்ந்து இந்த பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டக் கூடியவர்களை மிரட்டி பல லட்சம் பணம் பெற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த கும்பல் மீது மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் ஆஜராகி புதிதாக கட்டிடம் கட்டும் நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தொடர்ந்து இது போன்ற வேலைகளை செய்து வருகிறது இவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை ஏற்க்க மறுக்கின்றனர் என தெரிவித்தார்.

அப்பொழுது நீதிபதி இது போன்று நில உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத கும்பல் செயல்பட எவ்வாறு காவல்துறை அனுமதிக்கிறது? என கேள்வி எழுப்பினார் மேலும் இந்த புகார் மனு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share