×
 

தமிழகமே ஷாக்...!! “தலையை வெட்டி வீசுவோம்... குடும்பத்தையே அழிச்சிடுவோம்”... பாஜக முக்கிய நிர்வாகிக்கு ISIS கொலை மிரட்டல்....!

பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), இஸ்லாமோஃபோபியா பரவல், வன்முறை சம்பவங்கள்,  லவ் ஜிகாத், பசு பாதுகாப்பு, முத்தலாக் போன்றவற்றை கொண்டு வந்தது சில  இஸ்லாமிய அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தலைக்கு விலை வைப்பது, கொன்று விடுவோம் என மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. 

தற்போது ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் இருந்து பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டையில் மேல்விஷாரம் என்ற பகுதியில் பாஜகவினர் கூட்டம் நடத்த முடியாத நிலை நீடித்து வந்தது. அங்குள்ள திமுக ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பாஜக கூட்டம் நடத்த தடையாக இருந்த நிலையில், கடந்த 14ம் தேதி வேலூர் இப்ராஹிம் அப்பகுதியில் தெருமுனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும், பாரத பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மக்களிடையே உரையாற்றியுள்ளார். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அமர் பிரசாத் ரெட்டி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில், இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் தலையை வெட்டி வீசுவோம் என இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மணிப்பூரை பார்... வாய்ச்சவடால் விட்ட முதல்வர்... புள்ளி விவரத்தோடு விளாசிய பாஜக..!!

இதுகுறித்து அவருக்கு வந்துள்ள இமெயிலில், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து இந்துத்துவா ஆர்வலர்களால் குறிவைக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம், பாஜகவின் வேலூர் இப்ராஹிம், ராணிப்பேட்டையில் உள்ள மேல்விஷாரத்தில் முஸ்லிம்களைத் தாக்க ஒரு பாஜக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பாஜகவுக்கு வாக்களிக்காததற்காக எங்களை மிரட்டியுள்ளார். முஸ்லிம்கள் என்றென்றும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்!!!

பாஜக மற்றும் பிரதமர் மோடியை ஆதரித்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி  எங்கள் முக்கிய இலக்காக மாறியுள்ளார். எங்கள் சமூகத்திற்கு எதிராக யாரும் பேச அனுமதிக்க மாட்டோம்.அமர் பிரசாத் ரெட்டியின் தலை பொது இடத்தில் வெட்டி வீசப்படும். எங்கள் முஸ்லிம் சமூகத்தின் வலிமையைக் காட்ட அவரது முழு குடும்பத்தையும் அழிப்போம். எதிர்பாராத நேரத்தில் அவரது வீட்டில் 2 கிலோ ஆர்.டி.எக்ஸை வைத்து தரைமட்டமாக்குவோம். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச அனுமதி அளித்த காவல்துறைக்கு இது ஒரு சவால். முடிந்தால், அமர் பிரசாத் ரெட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!!!!! என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: கேப்டன் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது..!! தேமுதிகவை கடுகடுத்த தமிழக பாஜக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share