மத்திய கைலாஷ் டிராஃபிக்கிற்கு எண்டு கார்டு! ₹60 கோடி ‘எல்’ வடிவ மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் இந்த ‘எல்’ வடிவ மேம்பாலம் ₹60 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென் சென்னையின் மிக முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். சுமார் ₹61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், சென்னை ஐடி காரிடார் (OMR) பயணிகளின் நீண்ட காலக் கனவை நனவாக்கியுள்ளது.
மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். குறிப்பாக, கிண்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பகுதியிலிருந்து ஓஎம்ஆர் (OMR) நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்தச் சந்திப்பில் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டே, சர்தார் படேல் சாலையிலிருந்து நேரடியாக ஓஎம்ஆர் சாலைக்கு வாகனங்கள் தடையின்றிச் செல்ல இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!
அணுகு சாலை உட்பட 652 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலம் இருவழித்தட அகலம் கொண்டதாக இருந்தாலும், ஒருவழிப் போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையிலிருந்து ஓஎம்ஆர் நோக்கிச் செல்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். வளைவுப் பகுதியில் வாகனங்கள் சிரமமின்றித் திரும்பும் வகையில் 'குறுக்கு வெட்டுச் சாய்வுடன்' (Super-elevation) வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வளைவில் செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க 30 கி.மீ வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சர்தார் படேல் சாலையிலிருந்து வருபவர்கள் சிக்னலில் நிற்காமல் நேரடியாக ஐடி காரிடாருக்குள் நுழையலாம்.
சிக்னல் நேரம் குறைக்கப்படுவதால் அடையாறிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்ல முடியும். கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓஎம்ஆர்-லிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
இந்த பாலத்தால், அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் இனி தங்கு தடையின்றிச் செல்ல முடியும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!